உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மலையகப் பெண்!!

745

மலையகத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உலக சாதனைப்புத்தகத்தில் தனது கவித்திறனால் இடம்பிடித்து இலங்கைகக்கு பெருமைசேர்த்துள்ளார் மலையகப் பெண்னான ஷாருலதா பாலகிருஷ்ணன் என்பவர்.



இந்தியாவின் தமிழ் தொண்டன் பைந்தமிழ் சங்கம் மற்றும் நிலாவட்டம் இலக்கிய அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்த 100 கவிஞர்களின் தலா 100 கவிதைகள் கொண்ட “பத்தாயிரம் கவிதைகள்” அடங்கிய “கவித்தேனருவி” எனும் கவிதை தொகுப்பு நூலானது உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்நிகழ்வானது கடந்த (2023.11.23) ஆம் திகதி வட சென்னையில் இடம்பெற்றுள்ளது.பெண் கவிஞரான ஷாருலதா பாலகிருஷ்ணன் அவர்கள் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.குறித்த கவிதை நூலில் மலையகத்தைச் சேர்ந்த பெண் கவிஞரான ஷாருலதா பாலகிருஷ்ணன் அவர்களின் “எண்ணத்தின் கிறுக்கல்கள்’ எனும் கவிதை நூலும் இடம்பெற்றுள்ளது.