எங்கள் ஊர் ஓவியர்..!

1828

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும், அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்தவகையில், நமது பார்வையில் சிக்கிய வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த பிரசன்னா எனும் கலைஞரின் திறமையினை வெளிச்சப்படுத்துவதில் வவுனியா நெற் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.

prasanna



ஒரு புகைப்படத்தினைப் பார்த்தால் அதனை அப்படியே போட்டோபிரதி எடுப்பது போல அச்சுஅசலாக வரைவதுதான் பிரசன்னாவின் அசாத்திய திறமை. ஓவியம் வரைவது தவிர பிரசன்னா ஒரு சிறந்த குரல்வளம் கொண்ட ஒரு கலைஞரும் கூட. இவரின் திறமை வெளிச்சத்துக்கு வந்து இவரது கலைப்பயணம் மெம்மேலும் சிறப்படைய வவுனியா நெற் வாழ்த்துகிறது.

இவரின் கைவண்ணத்தால் உருவாகிய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக:

(பெரிதாக்கிப் பார்க்க படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள்.)