ATM இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது..!

602

களுத்துறை, கடுகுரந்த பிரதேச வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸார் இவர்களை நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தினை சோதனையிட்ட போது அங்கிருந்து 03 இலட்சத்து 95 ஆயிரம் பெருமதியான இலங்கை ரூபாய்கள், 500 ரூபா பெருமதி வாய்ந்த யூரோ 30 மற்றும் 1000 ரூபா பெருமதி வாய்ந்த சுவிஸ் பிராங் பணத்தாள்கள் 17 உம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதற்கும் மேலதிகமாக கையடக்கத் தொலைபேசி, கணனி மற்றும் பணம் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் 71 அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.