வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 94 மாணவர்கள் சித்தி

1466

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 94 மாணவர்கள் சித்தி

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 94 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 94 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 141 புள்ளி ஒரு மாணவரும் , 70 – 100 புள்ளிகளிக்கிடையே 11 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 3 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.



புலமைப்பரீட்சைக்கு 186 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றோர் 50.5 சதவீதமாகவும் 70 புள்ளிகளுக்கு மேல் பெறுபேற்றினை பெற்றமை 98.35 சதவீகிதமாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி 190 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் , அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.