ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

524

இலங்கை அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜூலை 11ம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை படையால் மீனவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை ஜூன் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.



இந்நிலையில் இன்று அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.