மேடையில் கண்கலங்கிய மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி!!

651

ஐஸ்வர்ய லட்சுமி..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ஆக் ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.



இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்கிறார். கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘கார்கி’ இந்த படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.

இப்பட விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, இந்த படம் நாமதம் ஆனது பற்றி கூறியபோது மேடையில் கண்கலங்கினார். அவரை , கவுதம் ஆகியோர் சமாதானம் செய்தனர்.

சாய்பல்லவி பேசும்போது இந்த படம் 3 ஆண்டுகளாக உருவானது. இந்த கதை உருவாக்கத்தில் இருந்தே இந்த படத்துடன் பயணிக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதனால் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார் என்றார்.

மேலும் இயக்குனர் கூட கூறுகையில் இந்த படத்திற்கு நிறைய நண்பர்கள் உதவி செய்தனர். அதில் முதல் நபர் ஐஸ்வரிய லட்சுமி தான் இந்த படத்திற்காக தான் சம்பாதித்த பணத்தை கொடுத்தார் என்றார்.

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்ய லட்சுமி கார்கி படம் சாய்பல்லவி இல்லாமல் சாத்தியமில்லை. இந்த படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி என்றார்.