அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து(2021) புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலயம் மாவட்ட மட்டத்தில் முன்னிலையில் உள்ளது.மேற்படி பாடசாலையின் மாணவன் செல்வன் அ.அபிரான் 192 புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேற்படி பரீட்சைக்கு 178 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 98 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் மூன்று மாணவர்கள் மட்டுமே 70க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.
பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றியோரில் 98.3% ஆனோர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வதுடன் வவுனியா நெற் இணையமும் இவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.


