மின்தடை..
நாட்டில் நாளைய தினமும் சுழற்சி முறையிலான மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
நாளையதினம் A,B,C ஆகிய பிரிவுகளில் 4.40 மணிநேர மின்வெட்டும், ஏனைய பிரிவுகளுக்கு 5.15 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கை முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக 4 மணிநேரத்திக்கும் அதிகமான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றநிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.