மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை..!!

905

கடும் காற்று காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மன்னாரிலிருந்து பொத்துவில் ஊடாக காலி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்களுக்கும் கடற் பிரதேச மக்களுக்குமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறிப்பிட்ட கடற் பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என அவ் நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிற்கும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிற்கும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.