முத்­தையா முரளிதரன் தமிழ் மக்­க­ளி­டம் மன்னிப்பு கோர வேண்டும் – புத்திரசிகாமணி..!

491

sigaமுத்­தையா முர­ளி­தரன் வடக்கில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித பிரச்­சி­னை­யு­மில்லை என வெளி­நாட்டு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கூறி­யி­ருப்­பது தமிழ் மக்­களின் இத­யங்­களை புண்­ப­டுத்­து­கின்­றதும் எமக்கு வேதனை அளிக்­கின்­ற­து­மான கூற்­றாக இருக்­கின்­றது என முன்னாள் நீதித்துறை பிர­தி­ய­மைச்சர் வீ. புத்­தி­ர­சி­கா­மணி தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

முத்­தையா முர­ளி­த­ர­னுக்கு எப்­போ­துமே தமிழ் உணர்வு இருந்­தது இல்லை என்­பது இலங்கை வாழ் தமி­ழர்­க­ளுக்கு நன்­றாகத் தெரிந்த விட­ய­மாகும்.

அர­சாங்கம் உட்­பட பல சிங்­களத் தலை­வர்கள் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும் எனக் கூறு­கின்ற இந்­நி­லையில் இவர் பிரச்­சினை இல்­லை­யெனக் கூறு­வது வேடிக்­கை­யாக இருந்­தாலும் எமது மக்­களை இது எந்­த­ள­விற்கு பாதித்­தி­ருக்கும் என்­பதை தமிழ் உணர்வு இல்­லா­ததால் அவரால் உண­ர­மு­டி­யாது.



அர­சாங்கம் நல்­லி­ணக்க ஆணை­கு­ழுவின் சிபாரிசு­களை நடை­மு­றை­ப­டுத்த முயற்­சிக்­கின்ற இவ்­வே­ளை­யில், இவ­ரது விளை­யாட்­டுத்­த­னமும் அபத்­த­மாக சொல்­லு­கின்ற வார்த்­தை­களும் எமக்­காக வாதிடும் சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளையும் அர­சாங்­கத்­தை­யும்­கூட நிந்­திப்­ப­தாக அமைந்­துள்­ளது.

எனவே, தமிழ் மக்­க­ளி­டமும் எமக்­காக பேசு­கின்ற அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் அர­சாங்­கத்­தி­டமும் மன்­னிப்புக் கோரி இது­போன்ற விளை­யாட்­டுத்­த­ன­மான அறிக்­கை­க­ளையும் பேச்சுகளையும் சொல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர் ஏதாவது பதவி பட்டங்களை எதிர்பார்பாரேயானால் அதற்கு வேறுவிதமாக செயற்பட வேண்டுமேயொழிய வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் எமது மக்களை துன்புறுத்தக் கூடாது என்றார்