கிழக்கு கடற்பரப்பிற்குச் சென்ற 8 மீனவர்களை காணவில்லை..!

608

seaஅசாதாரண காலநிலை காரணமாக கிழக்கு கடற்பகுதியில் மீனவ படகுகள் இரண்டு விபத்துகக்குள்ளானதில் மீனவர்கள் 8 பேர் காணாமற்போயுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் தெவிந்தர பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கான சென்ற படகுகள் இரண்டு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை எடுத்துள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு கடற் பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.