வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர்களும் தமிழ் மாமன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களுமான செல்வராஜா மதுரகன், பாலசிங்கம் திலீபன் ஆகியோர் இணைந்து எழுதிய முதலாவது கவிதைத்தொகுப்பான “இருளைப்படைத்தல்” தமிழ் மாமன்றத்தின் முதலாவது வெளியீடாக மலரவுள்ளது.
வரும் சனிக்கிழமை(23/11/2013) மாலை 4.30க்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் உலகப்புகழ் பெற்ற பேச்சாளர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் முதன்முறையாக வவுனியாவில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துசிறப்பிக்குமாறு நூலாசிரியர்களும் தமிழ் மாமன்றத்தினரும் அழைக்கிறார்கள்.