ஜியா கான் தற்கொலைக்கு காரணமான நடிகர் சூரஜ் கைது

661

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை அவரது காதலர் கற்பழித்த விவரம் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலம் பொலிசுக்கு நேற்று தெரியவந்தது.

பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் திகதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் சாகும் முன்பு தனது கையால் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்து அதை பொலிசில் ஒப்படைத்தனர். அந்த கடித்தத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் உள்ளன.

ஜியா தனது காதலர் சூரஜ் பஞ்சோலி பிற பெண்களுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். மேலும் சூரஜ் தன்னை தினமும் சித்ரவதை செய்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.



சூரஜ் தன்னை கற்பழித்ததாக கடிதத்தல் ஜியா தெரிவித்துள்ளார். மேலும் சூரஜின் குழந்தையை கருவிலேயே கலைத்ததையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து நடிகர் ‌ சூரஜ் மும்பை ‌பொலிசார்‌ நேற்று கைது ‌செய்தனர். இவர், பிரபல நடிகர் ஆதித்ய பன்சாலி, நடிகை ஜரினா வகாபின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.