படப்பிடிப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்த நடிகை!!

478

தேசிய விருது பெற்ற கன்னட நடிகை பத்ம குமுதா, ஒரு தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங்கின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இது கன்னட சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

58 வயதான அவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திங்கட்கிழமை அவர் ஷூட்டிங் செல்லும் முன் பார்த்ததுதான் கடைசியாக இருக்கும் என அவர்கள் கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.பத்ம குமுதாவின் மறைவுக்கு திரைபிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.