இலங்கையர்கள் சென்ற கப்பல் நியூசிலாந்தில் தடுத்து வைப்பு!!

583

இலங்கையர்கள் சென்ற கப்பல் ஒன்று நியூசிலாந்து கடற்பரப்பில் வைத்து, வனுவாட்டு (Vanuatu) சுங்க அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கப்பலின் தோற்றத்தை அடையாளம் காண தவறியமையினாலேயே குறித்த கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஜப்பானில் இருந்து கடல்மார்க்கமாக வருகை தந்த கப்பலே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.ஐந்து மாலுமிகள் மற்றும் கெப்டன் உள்ளிட்டவர்கள் குறித்த கப்பலில் பயணித்துள்ளனர். அவர்கள் ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் என்றும் சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கப்பலை புதிய உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக தாம் செல்வதாக மாலுமிகள் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த கப்பல் 20 வருடங்கள் பழமையானது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.போ Kava Export நிறுவனத்தின் உரிமையாளர் Paul Oktenனிடம் இருந்து குறித்த கப்பல் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.