செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!

423

iStock_000017225992Medium

நியூ­ஸி­லாந்­தி­லுள்ள வங்­கி­யொன்று வளர்ப்புப் பிரா­ணி­களை வளர்க்கும் தனது பணி­யா­ளர்­க­ளுக்கு ஊதி­யத்­துடன் கூடிய விநோ­த­மான விடு­மு­றையை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.பெற்­றோர்கள் தமது புதி­தாக பிறந்த பிள்­ளை­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கு வழங்­கப்­படும் விடு­ மு­றையை ஒத்­த­தாக இந்த விடு­முறை உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன் பிர­காரம் ஆரம்ப கட்­ட­மாக மேற்­படி ஏ.என்.எஸ். வங்­கியில் பணி­பு­ரியும் வளர்ப்புப் பிரா­ணி­களை வளர்க்கும் 21 பணி­யா­ளர்கள் தமது செல்லப் பிரா­ணி­களை கவ­னித்துக் கொள்­வதற்­காக ஊதி­யத்­துடன் கூடிய விடு­மு­றையைப் பெற­வுள்­ளனர்.இது தொடர்பில் அந்த வங்­கியின் பேச்­சா­ள­ரான சோனியா பெல் தெரி­விக்­கையில், செல்லப் பிரா­ணி­களின் விசு­வாசம் பணி­யா­ளர்­க­ளிடம் செல்­வாக்குச் செலுத்தும் ஒன்­றா­க­வுள்­ளதால் தமது வங்கி மேற்­படி நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ள­தாக கூறினார்.

வங்­கியின் கிளை­க­ளுக்கும் பணி­யா­ளர்­களின் வசிப்­பி­டங்­க­ளுக்கும் உள்ள தூரம் மற்றும் வளர்ப்புப் பிரா­ணி­களின் நிலைமை என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும் ஊதி­யத்­துடன் கூடிய விடு­முறை சில மணி நேர­மா­கவோ அன்றி சில வாரங்களாகவோ அமையலாம் என அவர் தெரிவித்தார். ஏ.என்.எஸ். வங்கித் தலைமை அலுவலகம் மற்றும் கிளைகளில் சுமார் 9,000 பேர் பணியாற்றுகின்றனர்.