ஸ்பெயின் நாட்டில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிஸார் கைது செய்தனர்.ஸ்பெயினில் கலா மில்லொர் கடற்கரை ரிசார்ட் பகுதியில் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்த ஹான்ஸ் ஹென்கெல்ஸ் மற்றும் ஸ்வெட்லனா பட்டுகோவா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
ஸ்வெட்லனாவுக்கு கொகைன் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் அவர் மனதால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அளவுக்கதிமான போதையில் தனது கணவர் ஹான்ஸை ஸ்வெட்லனா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.பின்னர், அவரது கையை வெட்டி தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் உடனடியாக ஸ்வெட்லனாவை கைது செய்தனர். தற்போது அவர் மனநில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.