தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல, பஸ்கொட, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள், காலி மாவட்டத்தில் நெலுவ மற்றும் தவளம பிரதேச செயலகப்பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, வலல்லாவிட, புளத்சிங்கள, பதுரலிய பிரதேச செயலகப் பிரிவுகள்,
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோறளே பிரதேச செயலகப்பிரிவு பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, எஹெலியகொட, பலாங்கொட பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியே மேற்படி இயற்கை அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆறு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் புரள்தல், குன்றுகள் சரிதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.