விரைவில் இங்கிலாந்து சாலையில் வலம் வரப்போகும் ஒட்டுனரில்லா கார்கள்!!(படங்கள்)

680

c1

இங்கிலாந்தில் தானியங்கி கார்கள் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் விரைவில் அவற்றை கிராமப் புற சாலைகளில் பயன் படுத்த திட்டமிட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தைத் தடுக்கும் வகையிலும் பட்டரி வாகனங்கள் மற்றும் தானியங்கி வாகனங்களைப் பயன் படுத்த முடிவு செய்துள்ளது இங்கிலாந்து அரசு.

இத்தகைய கார்களை அதிகப்படுத்துவதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



இங்கிலாந்தின் முயற்சிக்கு தக்கபடி, ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஜப்பானின் சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனமான நிசானுடன் இணைந்து இந்த தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.

சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள அறிவியல் பூங்கா சாலையில் இதன் சோதனை ஓட்டம் நடை பெற்றது. சோதனை ஓட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த தானியக்கி கார்களை போக்குவரத்து நிறைந்த தெருக்களில் ஓட்டிப்பார்ப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது.

முதற்கட்டமாக கிராமப்புறம் மற்றும் புறநகர் சாலைகளில் இந்த கார்கள் ஓட்டப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பாதையை இத்தானியங்கி கார்களில் பதிவு செய்து விட்டால் போதுமானது. அவை தொடர்ந்து அதே பாதையில் இயங்கும். ஆனால், தற்போதைக்கு சோதனை ஓட்டத்தின் போது பாதுகாப்பிற்கு ஒரு டிரைவரும் உடன் செல்வார் எனத் தெரிகிறது.

c4 c3 c2 c1