ஆர்யா என்னை பலமுறை ஏமாற்றியுள்ளார் – மனம் திறந்த டாப்ஸி!!

502

aarya

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தற்போது தெலுங்கு மொழியில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி, தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா நடித்து வரும் படத்திலும், லாரன்சின் கங்கா (முனி-3) படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஆர்யாவிடம் தான் பலமுறை ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,



ஆர்யா படப்பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசா கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, “நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய் என்பார். இதுபோல், ஏராளமான முறை, ஆர்யாவிடம் ஏமாந்திருக்கிறேன் என்றார்.