டெல்லி மசூதி அருகில் பிளேடினால் கை, கால்களை கீறி மருத்துவம் பார்க்கும் 79 வயது வினோத மருத்துவர்..(படங்கள் இணைப்பு)

1234

d8

 

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

டெல்லியில் உள்ள 79 வயது நபர் ஒருவர் பிளேடினால் நோயாளிகளின் உடலை கீறி ரத்தத்தை வரவழைத்து நீண்ட நாள் நோய்களை குணப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியின் மிகப்பெரிய மசூதி அருகில் Hakim Ghyas என்ற 79 வயது நபர் ஒருவர் ஒரு திறந்தவெளி கிளினிக் ஒன்றை வைத்துள்ளார். அவரிடம் வரும் நோயாளிகளின் கை மற்றும் கால்களின் பல இடங்களில் பிளேடினால் பல இடங்களில் கீறி ரத்தத்தை வரவழைக்கிறார். அவர் தானே நேரடியாக இந்த சிகிச்சையை செய்யாமல், தன்னிடம் பயிற்சி பெற்றவர்கள் மூலம் சிகிச்சை செய்து வருகிறார்.



பின்னர் அரைமணி நேரம் வெயிலில் நோயாளிகளை நிற்க வைத்து ரத்தம் தானாகவே கசிவது நின்றவுடன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். இந்த முறையான வைத்தியத்தால் அவர் மூட்டுவீக்கம், ரத்தபுற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கியுள்ளதாக பலர் நம்புகின்றனர்.

இந்த மருத்துவமுறை காட்டுமிராண்டித்தனமானது என்றும் இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி மருத்துவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

d1 d2 d3 d4 d5  d7 d8d6