உலகம் அழியும் நிலைமை உண்டாகி அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும், கடைசியாகத் தான் மூட்டைப்பூச்சி அழியும் என விஞ்ஞானி ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
சிறிய உயிரினமாக இருந்தாலும் மூட்டைப்பூச்சியின் சிறப்பு பற்றி அறிந்தால் ஆச்சர்யப் படுவீர்கள்.
உலகில் கடைசி வரை தாக்குப்பிடித்து வாழக்கூடிய சக்தி மூட்டைப்பூச்சிக்கு மட்டுமே உண்டு என லண்டன் விஞ்ஞானி ஒருவர் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.
சென்ட் அண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக்.மல்லே ஜேம்ஸ் இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என கண்டுபிடித்துள்ளாராம்.
அப்போது, உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும் என அவர் கூறுகிறார். அதன் மூலம் ஏற்படும் இரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும்.
இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிந்து போகுமாம். ஆனால், மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழுமாம். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என தெரிவித்துள்ளார் ஜோக்.