வடமாகாணத்தில் முதலில் சிவில் நிர்வாகமே தேவை..!

508

வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகச் சர்வதேசத்தால் அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடக்கில் முதலில்,சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்தார். கொழும்பு இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வடக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தப்படுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும். ஆனால் தற்போதே தேர்தலுக்கு முன்னோடியாக அரசு தானம் வழங்க ஆரம்பித்து விட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறிப்பாக மூக்குக் கண்ணாடி மற்றும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் போன்றவற்றைத் தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களில், அரசு தானமாக வழங்குகின்றது. அத்துடன் அரச சொத்துக்களும் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.