தன்னுடைய அம்மா, பெரியம்மா இடத்தை எந்த கதாநாயகியாலும் பிடிக்க முடியாது என கார்த்திகா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான பாரதிராஜாவின் அன்னக்கொடி அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், கார்த்திகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் அவர் தற்போது பிருந்தாவனம் என்ற கன்னட படத்திலும், தமிழில் டீல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
பிற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிக்கவே கார்த்திகா விருப்பமாக உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அம்மா ராதா, பெரியம்மா அம்பிகாவின் இடத்தை எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியாது.
அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள். சூப்பர்ஸ்டார்களைப் போன்று அவர்களுக்கு ரசிகர்கள் இருந்தனர்.
தற்போது அப்படி இல்லை, ஏராளமான புதுமுக நடிகைகள் வருவதால் போட்டி அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு அனைத்து ஹீரோக்களையும் பிடிக்கும் என்றும், பணத்திற்காக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.