அம்பிகா- ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகள் தான் தமிழில் கொடி கட்டி பறக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையிலும், அவர்கள் தான் சினிமாவை முழுதாக ஆக்கிரமித்து கொண்டுள்ளனர்.
அப்படி வரும் நடிகைகள் யாரும் இதுவரையிலும் தமிழ் சினிமாவை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டது இல்லை.
திருமணம் என்ற பட்சத்தில், கேரளாவை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கின்றனர்.
ஆனால் நஸ்ரியா நசீமோ, நான் எதிர்காலத்தில் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அறிவித்துள்ளார்.
மலையாளிகளுக்கு எந்த வகையிலும் தமிழர்கள் குறைந்தவர்கள் இல்லை என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.