விஸ்வரூபம் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கமல், சேகர் கபூர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முடித்து இந்த ஆண்டே படத்தினை வெளியிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் கமல். செப்டம்பரில் படத்தினை வெளியிட அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறாராம் கமல். கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்தினை தயாரித்து வருகிறது ஓஸ்கர் நிறுவனம்.
விஸ்வரூபம் படத்தில் இல்லாத 2 பேரை விஸ்வரூபம் 2வில் இணைத்து இருக்கிறார் கமல். வாஹாதே ரஹ்மான் மற்றும் ஆனந்த் மஹாதேவன் ஆகிய இருவரும் விஸ்வரூபம் 2வில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி விஸ்வரூபம் படம் 2:20 மணி நேரப் படம். ஆனால் விஸ்வரூபம் படத்தின் நீளத்தினை 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே தயார் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் கமல்.
சென்னையில் நடைபெற்ற விஸ்வரூபம் 2 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. சுமார் 90% படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சில காட்சிகளை டெல்லி, புனேவில் படமாக்க இருக்கிறார்கள்.
விஸ்வரூபம் 2 படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கமல்.