மண்டேலாவுக்கு பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற பரிந்துரை..!

640

மண்டேலாவின் உயிரை தக்கவைத்திருப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மருத்துவத் துணை இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அனுமதிக்குமாறு நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

அசைய முடியாத தாவர நிலையில் தொடர்ந்து இருப்பதால், அவர் சுவாசிப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் இவற்றை அகற்றிவிடுவது பற்றி யோசிக்குமாறு மண்டேலாவின் வைத்தியர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில மருத்துவ தகவல்களை அடிப்படையாக கொண்டு ஏ.எப்.ஃபி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தொடர்ந்து வேதனையுடன் சுவாசத்தை தொடர்வதிலும் பார்க்க இது சிறந்த முடிவு என மருத்துவர்கள் கூறியுள்ளனராம். எனினும் இந்த அறிக்கைகள் குறித்து மருத்துவர்களோ, மண்டேலாவின் குடும்பத்தினரோ தகவல் எதுவும் பின்னர் வெளியிடவில்லை.

மண்டேலா இன்னமும் தான் யார் எனும் நினைவுகளை இழக்கைல்லை.  அவர் மிக மோசமான உடல்நிலையில் இருக்கிறார். ஆனால் சுயநினைவை இழக்கவில்லை. நாம் பேச முயற்சிக்கும் போது அவர் தனது கண்களையும், வாயையும் அசைத்து எம்முடன் பேச முற்படுகிறார் என மண்டேலாவின் நெருங்கிய நண்பர் டெனிஸ் கோல்ட்பேர்க் தெரிவித்துள்ளார்.



95 வயதாகும் மண்டேலா கடந்த 25 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.