குவைத்தில் பணம் திருடிய இலங்கையர் கைது..!

783

குவைத் – ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து 6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ரிக்கா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பணத்தை வாகனத்தில் வைத்துவிட்டு ஆடை மாற்றுவதற்கு வீட்டுக்குள் சென்றவேளை தனது பணம் திருடப்பட்டதாக தொழில் தருணர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.