மேலும் 15 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தல்..

633

australian-flag

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு விமானத்தின் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரையில் 1285 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1072 பேர் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.