வாழைச்சேனை பாசிக்குடா முனை முருகன் கோவில் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் சேதமடைந்துள்ளது.
நேற்று இரவு 7.30 மணயிளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தீயினால் தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டங்கள் மற்றும் அரச காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தீயினை கல்குடா பொலிஸாரும்,இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.