யாழில் 6 மாதங்களில் 142 பேருக்கு காசநோய்..!

496

யாழ். குடாநாட்டில் கடந்த 6மாத காலப் பகுதியில் 142 பேர் காசநோய்க்கு இலக்காகி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டக் காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எஸ்.யமுனானந்தா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மார்பு நோய் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இந்த வருடத்தில் 6மாத காலப் பகுதியில் 11 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சிகிச்சைக்கு உட்படுத்தியோரில்142 பேருக்கு காச நோய் அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட142 பேரும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.