2 வயது தங்கையைச் சுட்டுக் கொன்ற 5 வயது அண்ணன்..!

673

அமெரிக்காவில் விளையாட்டாய் தாத்தாவின் துப்பாக்கியால், 5 வயது சிறுவன் ஒருவன் தனது 2 வயது தங்கையைச் சுட்டதில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.

அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்துவரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரது 5 வயது பேரனும், 2 வயது பேத்தியும் அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த தாத்தா, இடையில் வேறு வேலை காரணமாக உள் அறைக்குச் சென்றுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேரன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான்.

எதிர்பாராத விதமாக ட்ரிக்கரில் கை பட்டு விட, அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவனது தங்கையின் முகத்தில் பாயந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவள் பரிதாபமாக பலியானாள்.



மேலை நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெரியவர்களின் அஜாக்கிரதையாலேயே இத்தகைய உயிர் பலிகள் ஏற்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.