தெலுங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரசன்னா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கணவனுக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் . இதனையடுத்து பிரசன்னா தனது மனைவி லட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து கொடூரமாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் லட்சுமி தனது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து மகனை கவனித்து வந்தார். மேலும் மொத்த வரதட்சணை தொகையை கொடுக்கவில்லை எனக் கூறி திருப்பதியின் தாய் தொடர்ந்து லட்சுமியை துன்புறுத்தி வந்தார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த லட்சுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஜாகித்யாவில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் வீட்டு கண்ணாடியில் அம்மா அப்பா நான் வாழ விரும்பவில்லை.
கவனமாக இரு மகனே. தயவு செய்து என் மகனை அவர்களிடம் கொடுத்து விடாதீர்கள் என எழுதிவிட்டு லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருப்பதி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.