வாய்க்காலுக்குள் கார் புரண்டு வீழ்ந்து விபத்து!!

289

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (21.04) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கல்முனையிலிருந்து – திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.