கொழும்பு ராஜகிரியா பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் வேலை செய்து வந்த 22 இந்திய பிரஜைகள் விசாக்கள் காலாவதியான நிலையில் இலங்கை குடிவரவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவியல் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் விசாரணை பிரிவினர், ராஜகிரியா பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் சோதனை நடத்திதில், இந்தியபிரஜைகள் சிக்கியுள்ளனர்.
கைதானவர்களில் 17 பேர் சுற்றுலா விசாவில் மூன்று மாதங்களுக்கு முன் இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், 4 பேர் குடியிருப்புக் விசாவில் வந்திருந்ததுடன், ஒருவர் வணிக விசாவில் வந்திருந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதானவர்கள் தற்காலிகமாக அவர்கள் வெலிசராவிலுள்ள அடைப்புக் கூடத்தில் வைத்திருக்கப்படுவதாகவும், அவர்களை விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குடிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.