பேருந்தில் பொதிகளை தவறவிட்ட வெளிநாட்டுபயணிக்கு உதவிய பொலிஸார்!!

146

தனியார் பேருந்தில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் பொதிகளை கண்டுபிடித்த அனுராதபுரம் பொலிஸார், அதனை சுற்றுலாப் பயணி ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த வெள்ளிக்கிழமை (14) ஒரு பேருந்தில் இருந்து தனது பொதிகளை இறக்க மறந்துவிட்டதாக , சுற்றுலாப் பயணி அனுராதபுரம் பொலிஸ் சுற்றுலாப் பிரிவில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு-கோட்டையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த சுற்றுலாப் பயணி, அனுராதபுரம் நகரில் இறங்கும் போது தனது பொதிகளை எடுக்க மறந்துள்ளார்.



அது தொடர்பில், அனுராதபுரம் பொலிஸார் கோட்டை பேருந்து நிலையத்தில் நடத்திய விசாரணையில், தொலைந்து போன பொருட்களை வவுனியாவுக்குச் செல்லும் பேருந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சுற்றுலாப் பயணியை மீட்ட அனுராதபுர பொலிஸ் சுற்றுலாப் பிரிவின் அதிகாரிகள், வெளிநாட்டு பயணியின் பொதிகளை (15) அவரிடமே திருப்பி ஒப்படைத்துள்ளனர்.