வவுனியா முழுவதும் இன்று இரவு 1 1/2 மணிநேர மின்வெட்டு : விபரம் உள்ளே!!

5240

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்வாறு ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியா முழுவதும் இன்று (10.02.2025) மற்றும் நாளை (11.02.2025) இரண்டு நாட்களும் இரவு 8.00 மணிமுதல் 9.30 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அட்டவணையை பார்வையிட இங்கு அழுத்துக..