கடலில் நீராடச் சென்ற தந்தை – மகன் சடலமாக மீட்பு!!

471

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன் கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று காணாமல் போன நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் சடலங்களாக ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பொத்துவில் சங்கமன்;கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய மகன் டினுஜன் மற்றும் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.



குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் சம்பவ தினமான புதன்கிழமை (25) மாலையில் நத்தார் பண்டிகையையிட்டு கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடலில் நீராடிய இருவர், கடல் அலையால் இழுத்து செல்லப்படதையடுத்து அவர்களை காப்பாற்ற கடலில் குதித்த தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து காணாமல் போனவர்களை உறவினர்கள், கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரை பகுதியில் நேற்று காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

இதனையடுத்து சிலமணி நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.