வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழமையான மரம் காற்றின் காரணமாக முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இன்று (16.12) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருவதுடன், காற்றும் வீசி வருகின்றது. மதியம் வீசிய காற்றின் காரணமாக வவுனியா புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன்போது மற்றும் ஒரு மரக் கிளை மீது மரம் முறிந்து விழுந்ததால் அம் மரமும் முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக, அருகில் இருந்து அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன சேதமடைந்துள்ளது. அத்துடன் மின்சார இணைப்பும் அறுவடைந்து மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.