யானைக்கு வாழைப்பழம் கொடுத்த பெண் பரிதாபமாக பலி!!

922

புத்தல கதிர்காமம் வீதியில் கதிர்காமம் நோக்கி பயணித்த லொறி ஒன்று யானையால் கவிழ்ந்ததில், பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக கோனகனார பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதில் முதுகண்டிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான கே.ஜி.கெரசுதி (66) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிராமத்தைச் சேர்ந்த குழுவினருடன் லொறியில் கதிர்காம யாத்திரைக்குச் கடந்த (12) சென்று கொண்டிருந்த போது வீதியை மறித்து கொண்டு காட்டு யானைக்கு நின்று கொண்டுள்ளது.



இந்நிலையில் குறித்த பெண் யானைக்கு வாழைப்பழம் சீப்பு கொடுத்ததை அடுத்து , காட்டு யானை, லொறியில் இன்னும் உணவுகளை தேடியது. உணவுகள் கிடைக்காமையால், தனது தும்பிக்கையால் லொறியை புரட்டியது.

இதன்போது முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் புத்தள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.