விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

1304

மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர். தொடன்கொட, கெட்டகஹஹேன நேஹின்ன வீதியின் நேஹின்ன பிரதேசத்தில் நேற்று (06.12.2024) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கெட்டகஹாஹேனவில் இருந்து நேஹின்ன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 37 மற்றும் 42 வயதுடைய நேஹின்ன மற்றும் நேபட பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்களின் சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



மேலும் விபத்து தொடர்பில் தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்