வவுனியாவில் முழுக்கொள்ளளவை எட்டிய 100ற்கும் மேற்ப்பட்ட குளங்கள்!!

2214

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்துகாணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் நிறைந்து காணப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் வவுனியா குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் இன்று அதிகாலை முதல்மேலதிக நீர் வெளியேறி வருகின்றது.



இதேவேளை நேற்றுமாலை வரை மாவட்டத்தின் 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறிவருவதுடன், அநேகமான குளங்களில் 90சதவீதமான அளவு நீர் நிறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. அவற்றை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்