இலங்கையை 39 நாட்களாக நடைப் பயணம் மூலம் சுற்றி வந்து பாடசாலை மாணவன் ஒருவன் சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தரம் 06இல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் என்னும் மாணவனே தனது பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளான்.
11 வயதான குறித்த மாணவன் சாதனை படைக்கும் நோக்குடன் கடந்த 25-09-2024 ஆம் திகதி தனது தந்தையுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்தார்.
இவ்வாறான நிலையில், இவர் இலங்கை பூராகவும் 39 நாட்களில் சுற்றி வந்து ஆரம்பித்த இடமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்றையதினம் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.