வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக யாழ் இளைஞரிடம் மோசடி!!

525

வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் 80 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்த இளைஞரிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் வெளிநாட்டுக்கு அனுப்பாத காரணத்தால், அவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார் பணம் பெற்றுக்கொண்டவரை கைது செய்துனர்.



விசாரணைகளின் பின்னர், நேற்றைய தினம் (15.10) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.