வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது!!

2734

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தேசியமக்கள் சக்தி இன்று (11.10.2024)தாக்கல் செய்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.



முன்னதாக இரட்டை பெரியகுளம் பகுதியில்இருந்து வாகனங்களில் ஊர்வலமாக வருகைதந்த கட்சியின் ஆதரவாளர்கள் அதன் பின்னர் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியானது உபாலி சமரசிங்க, செல்வத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஷ்வரன், பாத்திமா அயிஸ்த்தா, பிரேமரத்தின, ஜோகராஜா சிவரூபன், அன்டன் கலை, அபுபாகீர் பிரைஸ்தீன், இராதாகிருஸ்ணன், ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுளனர்.