வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை 4 கட்சிகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி இன்றையதினம் தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, சோசலிச மக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடு முழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.