இலங்கை அணி வீரருக்கு மூன்று வருடங்கள் விளையாடத் தடை!!

494

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்லவுக்கு (Niroshan Dickwella) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று வருடங்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டதாக 2024 ஓகஸ்ட் 16ஆம் திகதி அன்று, இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியது.

அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டிக்வெல்ல குற்றவாளியாக கருதப்பட்டார்.



இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய ஊக்கமருந்து சோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.