வன்னி தேர்தல் தொகுதியில் 387 வாக்குப்பெட்டிகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது!!

716

வன்னி மாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் வவுனியாமாவட்டத்தில் 128585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும் மன்னாரில் 90607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக வன்னி மாவட்டத்தில் 4796 அரச ஊழியர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பொலிசார், விசேட அதிரடிப்படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் இதுவரை 36 சிறியளவிலான தேர்தல் முறைப்பாடுகளே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சாதாரண வாக்குஎண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12, முல்லைத்தீவில் 8, மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தபால்வாக்குகள் எண்ணுவதற்காக 10 நிலையங்களும் என மொத்தமாக 37 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் வாக்குகள் நாளை மாலை 6 மணியளவில் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.