தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 72வது பிறந்ததினம் இன்றையதினம் அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் குறித்தநிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவளார்கள் கலந்துகொண்டனர்.