வவுனியா நகரசபை தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2ஆம் இடம் பிடித்து சாதனை!!

813

ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 20 விருதுகளைப் பெற்று வடக்கு மாகாணம் முதலாமிடம் பெற்றுள்ளதுடன், அதில் வவுனியா நகரசபை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிறனை மதிப்பிடுவதற்கான ஸ்வர்ணபுரவர தேசியவிருது வழங்கும் விழாவில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களால் ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.



நாடு முழுவதுமுள்ள 276 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட சபைகளின் செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் 62 விருதுகளில் வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்கள் 20 விருதுகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை முதலாமிடத்தைப் பெற்று தங்க கேடயத்தையும் பெற்றுக் கொண்டது.